என்னிடம் உலகில் உனக்கைக் கவர்ந்த, மிகவும் சுவாரசியமான விஷயம் எதுவெனக் கேட்டால் "பெண்கள்" என்று தான் சொல்வேன். சலிப்பூட்டக் கூடிய எந்தப் பெண்ணையும் இதுவரை சந்தித்ததே இல்லை என்றுதான் சொல்வேன். பெண்களின் சில செயல்கள் சலிப்பூட்டச் செய்யும், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் சில செயல்கள் சலிப்பூடுகின்றன என்று சொல்வதற்கும் பெண்களே சலிப்பூட்டுகின்றனர் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது
ஒரு எளிமையான, சாதாரணமான ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவானவை. அவை பெரும்பாலும், அவன் வளர்ந்த சூழலில் பொதுவாக பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட கடமைகளின் நீட்சியாகவே இருக்கும். உதாரணத்திற்கு, நன்றாக சமைக்கத் தெரியவேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் / கூடாது இப்படி சாதாரணமானவை தான். ஆனால், கொஞ்சம் வாசிப்பு, சிந்திக்கும் தளத்தினுள் காலடி எடுத்துவைக்கும்போது, தன்னுடைய துணையோ, தோழியோ அதே போல சிந்திக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனதில் முளைத்துவிடுகிறது.
நண்பன் ஒரு நாள் கவலையுடன் சொன்னான், " என் காதலி தீவிர விஜய் ரசிகை, எனக்கு இப்படி அமையும் என்று எதிர் பார்க்கவே இல்லை. நான் கிம்கிடுக் பற்றிப் பேசினால், ஆதி அளவுக்கு இருக்குமா? என்றாள்.. கடைசிவரை ஒத்துவருமா என்று தெரியல மச்சி". சிரித்துக்கொண்டே கேட்டேன், "எதற்காக அவளிடம் நீ கிம் கி டுக் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று. "அந்தப் படம் எனக்கு ஒரு பார்வை அனுபத்தைக் கொடுத்தது, அதை அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு வாழ்க்கைத்துணையிடம் இதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நல்லது தானே?" என்றான்.
"உனக்கு அவளிடம் க்ரே கார்டன் பற்றிப் பேச வேண்டும், இந்தியா ஏன் மிக் விமானங்களை வைத்துக் கொன்று மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும், தி.ஜாவின் கும்பகோணத்தை அவளுடன் காலரா நடந்து அனுபவிக்க வென்றும் இப்படியெல்லாம் எதிர்பார்ப்பிருக்கிறது. ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகளை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஃபைட் கிளப் பற்றி மூன்று மணி நேரம் பேசுவதை விட, உன்னுடன் பீச்சில் மிளகாய் பச்சி சாப்பிடுவது அவளுக்கு பிடித்ததாக இருக்கலாம்.
இதில் உயர்வு தாழ்வு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு உயர்வாகப் படுவது, அவளுக்கு தேவையில்லாததாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும், உன்னுடைய எதிர்பார்ப்புகள் காலத்துக்கும் மாறாதவை என்று சொல்ல முடியுமா? நேற்று பால குமாரனைப் போல் உலகில் யாரும் எழுத முடியாது என்று சொன்னாய். இன்று கரிச்சான் குஞ்சு என்கிறாய். உன் சிந்தனைத்தளம் நகரும்போதேல்லாம், அவளுடையதும் நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பாயா?
சரி இப்படி எடுத்துக்கொள், நீ பாலகுமாரன் பற்றி பேசும்போது, "ச்சீ கருமம்" என்று சொல்லி அவள் "மார்க்குவெஸ், யோசா ரேஞ்சில் இருக்கும் எனக்கு, இவன் ஒத்துவருவானா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? கலை, இலக்கியம், அரசியல், அறிவியல் இவற்றில் ஒருவரின் நிலைப்பாட்டை வைத்து அவரைக் காதலிக்கவோ, நண்பராக்கிக் கொள்ளவோ முடியாது. மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நீ எவ்வளவு வாசித்தாலும், சிந்தித்தாலும் பிரயோஜனமே இல்லை" என்றேன்.
இந்த உரையாடலை ஏனோ ஜெயமோகனுக்கு டெடிகேட் செய்யத் தோன்றியது. "நீங்கள் இலக்கியவாசகராகவும், யோசிப்பவராகவும் இருந்தால், வாழ்நாளில் சுவாரசியமான நான்கைந்து இந்தியப் பெண்களைக் கூட சந்திக்கப் போவதில்லை" என்கிறார். பாவமாக இருக்கிறது. அவரை நினைத்து அல்ல, அவரைச் சந்தித்த அந்தப் பெண்களை நினைத்து. ஒரு பெண்ணை சுவாரசியமாக பேசவைக்கக் கூடத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டு என்ன கஷ்டப்பட்டார்களோ, தெரியவில்லை.
ஒரு எளிமையான, சாதாரணமான ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவானவை. அவை பெரும்பாலும், அவன் வளர்ந்த சூழலில் பொதுவாக பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட கடமைகளின் நீட்சியாகவே இருக்கும். உதாரணத்திற்கு, நன்றாக சமைக்கத் தெரியவேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் / கூடாது இப்படி சாதாரணமானவை தான். ஆனால், கொஞ்சம் வாசிப்பு, சிந்திக்கும் தளத்தினுள் காலடி எடுத்துவைக்கும்போது, தன்னுடைய துணையோ, தோழியோ அதே போல சிந்திக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனதில் முளைத்துவிடுகிறது.
நண்பன் ஒரு நாள் கவலையுடன் சொன்னான், " என் காதலி தீவிர விஜய் ரசிகை, எனக்கு இப்படி அமையும் என்று எதிர் பார்க்கவே இல்லை. நான் கிம்கிடுக் பற்றிப் பேசினால், ஆதி அளவுக்கு இருக்குமா? என்றாள்.. கடைசிவரை ஒத்துவருமா என்று தெரியல மச்சி". சிரித்துக்கொண்டே கேட்டேன், "எதற்காக அவளிடம் நீ கிம் கி டுக் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று. "அந்தப் படம் எனக்கு ஒரு பார்வை அனுபத்தைக் கொடுத்தது, அதை அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு வாழ்க்கைத்துணையிடம் இதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நல்லது தானே?" என்றான்.
"உனக்கு அவளிடம் க்ரே கார்டன் பற்றிப் பேச வேண்டும், இந்தியா ஏன் மிக் விமானங்களை வைத்துக் கொன்று மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும், தி.ஜாவின் கும்பகோணத்தை அவளுடன் காலரா நடந்து அனுபவிக்க வென்றும் இப்படியெல்லாம் எதிர்பார்ப்பிருக்கிறது. ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகளை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஃபைட் கிளப் பற்றி மூன்று மணி நேரம் பேசுவதை விட, உன்னுடன் பீச்சில் மிளகாய் பச்சி சாப்பிடுவது அவளுக்கு பிடித்ததாக இருக்கலாம்.
இதில் உயர்வு தாழ்வு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு உயர்வாகப் படுவது, அவளுக்கு தேவையில்லாததாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும், உன்னுடைய எதிர்பார்ப்புகள் காலத்துக்கும் மாறாதவை என்று சொல்ல முடியுமா? நேற்று பால குமாரனைப் போல் உலகில் யாரும் எழுத முடியாது என்று சொன்னாய். இன்று கரிச்சான் குஞ்சு என்கிறாய். உன் சிந்தனைத்தளம் நகரும்போதேல்லாம், அவளுடையதும் நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பாயா?
சரி இப்படி எடுத்துக்கொள், நீ பாலகுமாரன் பற்றி பேசும்போது, "ச்சீ கருமம்" என்று சொல்லி அவள் "மார்க்குவெஸ், யோசா ரேஞ்சில் இருக்கும் எனக்கு, இவன் ஒத்துவருவானா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? கலை, இலக்கியம், அரசியல், அறிவியல் இவற்றில் ஒருவரின் நிலைப்பாட்டை வைத்து அவரைக் காதலிக்கவோ, நண்பராக்கிக் கொள்ளவோ முடியாது. மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நீ எவ்வளவு வாசித்தாலும், சிந்தித்தாலும் பிரயோஜனமே இல்லை" என்றேன்.
இந்த உரையாடலை ஏனோ ஜெயமோகனுக்கு டெடிகேட் செய்யத் தோன்றியது. "நீங்கள் இலக்கியவாசகராகவும், யோசிப்பவராகவும் இருந்தால், வாழ்நாளில் சுவாரசியமான நான்கைந்து இந்தியப் பெண்களைக் கூட சந்திக்கப் போவதில்லை" என்கிறார். பாவமாக இருக்கிறது. அவரை நினைத்து அல்ல, அவரைச் சந்தித்த அந்தப் பெண்களை நினைத்து. ஒரு பெண்ணை சுவாரசியமாக பேசவைக்கக் கூடத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டு என்ன கஷ்டப்பட்டார்களோ, தெரியவில்லை.
செம்ம is the word!
ReplyDelete