Sunday, 1 December 2013

நீதி போதைக் கதை - 2 

எட்டு பேரும் ஒவ்வொருவராக போதையில் கவுந்துக் கொண்டிருந்தார்கள். தீபக் மட்டும் தனது ஏழாவது ரவுண்டை நிதானமாக அடித்துக் கொண்டிருந்தான். எதிரே சுரேஷ் கொக்க கோலாவையும் மூங் தாலையும் கையில் வைத்துக் கொண்டே, "என்னடா குடிச்சானுங்க? இப்படி மட்டை ஆகிட்டனுங்க?" எனக் கேட்டான்.

"சின்னப் பசங்க சுரேஷ், இவுனுங்கல்லாம் எதுக்கு குடிக்குறானுங்கன்னே தெரியல, இப்படி ஒயின், பீருக்கேல்லாம் பிளாட் ஆகிடுரானுங்க. எனக்குத் தான் ஏறவே மாட்டேங்குது"

சுரேஷ் ஆர்வமாகக் கேட்டான், "நீங்க ரொம்ப காலமா குடிப்பீங்களா?"
"இல்லைங்க, இப்பத்தான் ரெண்டு வருஷமா குடிக்குறேன், ஆனா ஒன்னு நீங்க மட்டும் தான் தண்ணி அடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பாத்து கூட்டி போகனும்"
தண்ணி அடிச்சாலும் இவ்வளவு பொறுப்பான ஒருத்தனா? என ஆச்சர்யப்பட்டான் சுரேஷ்.

ஏழாவது ரவுண்ட் முடிந்ததும் தீபக் மீண்டும் சொன்னான் "சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"கொஞ்ச நேரம் ஆகட்டும், எல்லாரையும் எழுப்பி வண்டியில ஏத்திடலாம்"

"ஆமா சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"கண்டிப்பா பாத்துக்குறேன்"

"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
.............................
"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
.......................................
"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
..........................
"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"போதும்டா நெறைய தடவ சொல்லிட்ட, நான் கூட்டி போறேன் டா"

"சரிங்க சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
.................................

"சுரேஷ், நீங்க மட்டும் தான் குடிக்காம தெளிவா இருக்கீங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிப் போகணும்"
"டேய் ........, சரக்கு மிச்சம் இருக்காடா, இருந்தா எனக்கும் ஊத்து".

No comments:

Post a Comment