ஷாப்பிங்
தோழிக்கு சுடிதார் வாங்குவதற்காக ஒரு கடையில் சில மணி நேரங்கள் தேடி, கடைசியாக ஒரு கருப்பு சுடிதார் பார்த்ததும் இருவருக்கும் பிடித்திருந்தது. "நல்லா இருக்கு, எடுத்துக்கோ" என்றேன். "இது இருக்கட்டும், அந்த லைனையும் பார்க்கலாம்" என்றால். அந்த வரிசையைப் பார்த்து முடித்து வரும்போது, அந்த கறுப்புச் சுடிதாரை இன்னொரு பெண் தனக்கு வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் அப்பாவும் அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிட்டதால், நேரடியாக பில் போடா எடுத்துச் சென்று விட்டனர்.
இதைப் பார்த்ததும் தோழிக்கு வந்த கோபத்திற்கு, கடையில் எதுவும் கலவரம் வந்துவிடாமல் இருக்க, எல்லாத் திட்டையும் நானே வாங்கிக் கொண்டு, சரி வா வேற பார்க்கலாம் என்றேன். "வெட்டியா தானே இருக்க, அதை எடுத்து கையில வச்சிருக்கலாம்ல?" என்று திட்டிக் கொண்டே பார்க்க மனமில்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தாள். அந்த நேரத்தில் சேல்ஸ்மேன் புண்ணியவான் அதே மாடல் கருப்பு சுடிதாரில் இரண்டு பீஸ்களைக் கொண்டுவந்து லைனில் வைத்தார். "கடவுள் இருக்கான் கொமாரு" என்று நினைத்துக் கொண்டே அவளிடம் அதைக் காட்டி, வா போய் எடுக்கலாம் என்றேன். முறைத்துவிட்டு " அந்த பொண்ணு எடுத்த அதே சுடிதாரை எல்லாம் என்னால எடுக்க முடியாது, வேற பார்க்கலாம்" என்று அவள் சொன்னபோது, லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது.
மறுபடியும் லைன்-1 இல் ஆரம்பித்து லைன்-3 இல் வரும்போது, ஒரு சுடிதாரை ஆர்வமாக எடுத்து அவள் மேல் வைத்துக் காட்டி நல்லா இருக்கா என்றாள். ஆஹா முடியப் போகுது என்ற சந்தோஷத்தில், அருமையா இருக்கு, இந்தக் கலர் தான் சூப்பரா வித்தியாசமா இருக்கு என்றேன். ஸ்கூலில் அத்தனை நாடகங்கள் நடித்தும் கடைசியில் எதுவம் கை கொடுக்கவில்லை. எப்படியோ கண்டுபிடித்துவிட்டு வேண்டாம் என்றாள். ராஜதந்திரங்கள் வீணாகப் போன சோகத்தில் சரி வா அடுத்து பார்க்கலாம் என்றேன். அதையே கையில் வைத்துக் கொண்டே இருந்தாள், "பிடிச்சிருந்தா எடு" என்றேன்.
பக்கத்தில் கூப்பிட்டு "நமக்குப் முன்னாடி ஒரு அம்மாவும் பொண்ணும் நிக்கிறாங்களா?" என்றாள். பார்த்தேன். "நான் இதை எடுத்து வச்சுப் பார்க்கும்போது, அந்த பொண்ணு அவங்க அம்மா கிட்ட இந்த சுடிதாரைக் காட்டி நல்லா இருக்குல்லன்னு கேட்டுச்சு, அந்த அம்மாவும் தலையாட்டுச்சு, இப்பவும் அவங்க இதையே தான் பார்த்துகிட்டு இருக்காங்க பாரு" என்றாள். "சரி வச்சுட்டு வா, அவங்க எடுக்கட்டும்" என்றேன். "அதெப்படி அப்படியே விட முடியும்.. கொஞ்ச நேரம் அவங்களை கடுப்பேத்தலாம்." என்று அடுத்த பத்து நிமிடங்களுக்கு கையிலேயே வைத்திருந்தாள். இவள் வைத்துவிட்டுக் கிளம்பும்போது அவர்கள் வந்து எடுக்கிறார்களா என்பதையும் திரும்பிப் பார்த்துக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.
தலை சுற்றலை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அடுத்து எங்கே என்றேன். போத்தீஸ். ரெடிமேட் லைன் 1-5, மட்டீரியல் லைன் 1- 8 என்று சுழற்சி முறையில் சென்று கொண்டிருந்தது. இடையிடையில் இது எப்படி இருக்கு என்று எதையாவது காட்டுவதும், கேவலமா இருக்கு என்ற பதிலில் கடையில் ஒரு பல்ப் கூடுவதுமாக இருந்தது. ஒரு வழியாக ஒரு மஞ்சள் சுடிதாரை எடுத்து சேல்ஸ் கேர்ளிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொன்னாள். அந்தப் பக்கம் போன இன்னொரு பெண் அதை ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டே போனாள். என்னிடம் வந்து "இப்போ பாரு அந்த பொண்ணு மஞ்சள் கலரையா தேடுவாள்" என்று கிசுகிசுத்தாள். ஆச்சர்யமாக அவளும் அப்படியே செய்துகொண்டிருந்தாள். "சரி எடுத்தாச்சுல்ல, வா போகலாம்" என்றேன். "நமக்கு மஞ்சள் வேண்டாம், பச்சையில் பார்க்கலாம்" என்று சொன்னபோது அப்படியே கண்கள் சொருகி இரு வரேன் என்று நகர்ந்தேன். கொஞ்சம் உட்காரலாம் என்று சேர்கள் போட்டிருக்கும் பகுதிக்குச் சென்றால், எல்லா இருக்கைகளையும் அடைத்துக் கொண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.
தோழிக்கு சுடிதார் வாங்குவதற்காக ஒரு கடையில் சில மணி நேரங்கள் தேடி, கடைசியாக ஒரு கருப்பு சுடிதார் பார்த்ததும் இருவருக்கும் பிடித்திருந்தது. "நல்லா இருக்கு, எடுத்துக்கோ" என்றேன். "இது இருக்கட்டும், அந்த லைனையும் பார்க்கலாம்" என்றால். அந்த வரிசையைப் பார்த்து முடித்து வரும்போது, அந்த கறுப்புச் சுடிதாரை இன்னொரு பெண் தனக்கு வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் அப்பாவும் அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிட்டதால், நேரடியாக பில் போடா எடுத்துச் சென்று விட்டனர்.
இதைப் பார்த்ததும் தோழிக்கு வந்த கோபத்திற்கு, கடையில் எதுவும் கலவரம் வந்துவிடாமல் இருக்க, எல்லாத் திட்டையும் நானே வாங்கிக் கொண்டு, சரி வா வேற பார்க்கலாம் என்றேன். "வெட்டியா தானே இருக்க, அதை எடுத்து கையில வச்சிருக்கலாம்ல?" என்று திட்டிக் கொண்டே பார்க்க மனமில்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தாள். அந்த நேரத்தில் சேல்ஸ்மேன் புண்ணியவான் அதே மாடல் கருப்பு சுடிதாரில் இரண்டு பீஸ்களைக் கொண்டுவந்து லைனில் வைத்தார். "கடவுள் இருக்கான் கொமாரு" என்று நினைத்துக் கொண்டே அவளிடம் அதைக் காட்டி, வா போய் எடுக்கலாம் என்றேன். முறைத்துவிட்டு " அந்த பொண்ணு எடுத்த அதே சுடிதாரை எல்லாம் என்னால எடுக்க முடியாது, வேற பார்க்கலாம்" என்று அவள் சொன்னபோது, லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது.
மறுபடியும் லைன்-1 இல் ஆரம்பித்து லைன்-3 இல் வரும்போது, ஒரு சுடிதாரை ஆர்வமாக எடுத்து அவள் மேல் வைத்துக் காட்டி நல்லா இருக்கா என்றாள். ஆஹா முடியப் போகுது என்ற சந்தோஷத்தில், அருமையா இருக்கு, இந்தக் கலர் தான் சூப்பரா வித்தியாசமா இருக்கு என்றேன். ஸ்கூலில் அத்தனை நாடகங்கள் நடித்தும் கடைசியில் எதுவம் கை கொடுக்கவில்லை. எப்படியோ கண்டுபிடித்துவிட்டு வேண்டாம் என்றாள். ராஜதந்திரங்கள் வீணாகப் போன சோகத்தில் சரி வா அடுத்து பார்க்கலாம் என்றேன். அதையே கையில் வைத்துக் கொண்டே இருந்தாள், "பிடிச்சிருந்தா எடு" என்றேன்.
பக்கத்தில் கூப்பிட்டு "நமக்குப் முன்னாடி ஒரு அம்மாவும் பொண்ணும் நிக்கிறாங்களா?" என்றாள். பார்த்தேன். "நான் இதை எடுத்து வச்சுப் பார்க்கும்போது, அந்த பொண்ணு அவங்க அம்மா கிட்ட இந்த சுடிதாரைக் காட்டி நல்லா இருக்குல்லன்னு கேட்டுச்சு, அந்த அம்மாவும் தலையாட்டுச்சு, இப்பவும் அவங்க இதையே தான் பார்த்துகிட்டு இருக்காங்க பாரு" என்றாள். "சரி வச்சுட்டு வா, அவங்க எடுக்கட்டும்" என்றேன். "அதெப்படி அப்படியே விட முடியும்.. கொஞ்ச நேரம் அவங்களை கடுப்பேத்தலாம்." என்று அடுத்த பத்து நிமிடங்களுக்கு கையிலேயே வைத்திருந்தாள். இவள் வைத்துவிட்டுக் கிளம்பும்போது அவர்கள் வந்து எடுக்கிறார்களா என்பதையும் திரும்பிப் பார்த்துக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.
தலை சுற்றலை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அடுத்து எங்கே என்றேன். போத்தீஸ். ரெடிமேட் லைன் 1-5, மட்டீரியல் லைன் 1- 8 என்று சுழற்சி முறையில் சென்று கொண்டிருந்தது. இடையிடையில் இது எப்படி இருக்கு என்று எதையாவது காட்டுவதும், கேவலமா இருக்கு என்ற பதிலில் கடையில் ஒரு பல்ப் கூடுவதுமாக இருந்தது. ஒரு வழியாக ஒரு மஞ்சள் சுடிதாரை எடுத்து சேல்ஸ் கேர்ளிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொன்னாள். அந்தப் பக்கம் போன இன்னொரு பெண் அதை ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டே போனாள். என்னிடம் வந்து "இப்போ பாரு அந்த பொண்ணு மஞ்சள் கலரையா தேடுவாள்" என்று கிசுகிசுத்தாள். ஆச்சர்யமாக அவளும் அப்படியே செய்துகொண்டிருந்தாள். "சரி எடுத்தாச்சுல்ல, வா போகலாம்" என்றேன். "நமக்கு மஞ்சள் வேண்டாம், பச்சையில் பார்க்கலாம்" என்று சொன்னபோது அப்படியே கண்கள் சொருகி இரு வரேன் என்று நகர்ந்தேன். கொஞ்சம் உட்காரலாம் என்று சேர்கள் போட்டிருக்கும் பகுதிக்குச் சென்றால், எல்லா இருக்கைகளையும் அடைத்துக் கொண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.
No comments:
Post a Comment