Thursday, 27 February 2014

கூர்வலி


வார்த்தைகளை வேட்டையாட முயன்று முயன்று 
தோற்றுக் கொண்டிருக்கிறேன்

என் வலியின் கூர்மையில் 
அத்தனை வார்த்தைகளும் நொறுங்குகின்றன

வலி என்னைக் கிழித்துவிடாமல் இருக்கவே 
வார்த்தைகளைக் கிழித்துக் கொண்டிருக்கிறேன் 

உன் பலத்தால் உண்டான வலிகளை 
சிறுநீர் கழிக்கையில் எரிச்சலாகவும்
இருட்டிய அறையில் தனிமையாகவும் 
கடத்திக்கொண்டிருக்கிறேன் 

என் இயலாமையால் வந்த வலியைத் தான் 
மறைக்கவோ கடக்கவோ முடியாமல் தவிக்கிறேன்

அம்மாவையும் கிழித்துவிட விருப்பமில்லை, 
இந்த டையரியையேனும் கிழிக்காதிருக்க முயல்கிறேன் 
அந்தக் கூர்மை சகலத்தையும் கிழித்துவிடுகிறது

என்னைக் கிழித்தாலொழிய மழுங்காக் கூர்மை அது.

No comments:

Post a Comment