Thursday, 27 February 2014

திருடப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு பென்சிலாகவோ 
செருப்பாகவோ
நூறு ரூபாய்த் தாளாகவோ

ஒரு பொம்மையாகவோ
மூகுத்தியாகவோ
செல்போனாகவோ 

ஒரு பர்ஸாகவோ
புத்தகமாகவோ
செயினாகவோ

திருடப்பட்டிருக்கிறீர்களா?

திருடியவுடன் வரும் நடுக்கத்தையும்
யாருமற்ற போது அதை எடுத்துப் பார்க்கையில் சந்தோஷத்தையும்
தொலைத்தவனை நினைக்கையில் வரும் குற்ற உணர்வையும்
மீண்டும் மீண்டும் திருடத் தூண்டும் வேட்கையையும்

திருடனாக உணர்ந்திருப்பீர்கள்
திருடியவன் கையில் இருக்கும்போது
திருடனை உணர்ந்திருக்கீர்களா?

திருடப்பட்டிருக்கிறீர்களா?

No comments:

Post a Comment