நண்பனுக்காக திருச்சி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, என்னருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். எந்த பஸ்ஸில் எந்த பொண்ணு ஏறுகிறாள் என்ற ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்ததால் அவரை நான் கண்டுகொள்ளவில்லை.
"சார்" என்று அவரே பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.
ஏதோ பஸ் ரூட் தான் கேட்கப் போகிறார் என்று திரும்பினேன்
"பூனா ல மலை மேல ஒரு பஸ் கவிழ்ந்து நெறைய பள்ளிக் குழந்தைகள் இறந்துட்டாங்களே, இதுக்கு என்ன காரணம்ன்னு நெனக்குறீங்க?"
என்னடா இந்த ஆளு சமந்தம் இல்லாம ஏதோ கேக்குறாரே என்று பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்
"நாட்டில, சுனாமி, பூகம்பம் எல்லாம் வந்து நெறய பேர் சாகுறாங்களே? ஏன்னு தெரியுமா?" என்று கேட்டார்.
"தெரியலைங்க, நீங்களே சொல்லுங்க" என்றேன்
"இந்த புத்தகத்தைப் படிங்க, இதுல எல்லா விளக்கமும் இருக்கு" என்று சொல்லி கையில் அழகாக கவர் டிசைன் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்ததுமே சிரிப்பு வந்துவிட்டது, சிக்கிட்டாண்டா ஒருத்தன், நண்பன் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும், இந்த ஆளை விடக் கூடாது என்று முடிவு செய்து
"நீங்களே சொல்லுங்களேன், இதுக்கெல்லாம் என்ன காரணம்?" என்று கேட்டேன்.
"இதுக்கெல்லாம் மனிதன் செஞ்ச பாவம் தான் தம்பி காரணம்"
"சுனாமி, பூகம்பத்துக்கு கூடவா?"
"ஆமா தம்பி, அவ்வளவும் பாவம்"
"அது சரிங்க, அந்த குழந்தைங்க என்ன பாவம் செஞ்சாங்க?"
"அது அவங்க போன ஜென்மத்துல செஞ்ச பாவம் தம்பி, கடவுள் எல்லா பாவத்தையும் கணக்கு வச்சுருப்பாரு"
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "சார் நான் ஒரு இஞ்சினியர், நான் கடவுளை நம்புவேன், எனக்கு ஒரு கோடி லாட்டரியில பரிசு விழும்ன்னு கூட நம்புவேன், அது என் இஷ்டம். ஆனால் என்கிட்டே வந்து நீங்க கடவுள்ன்னு பேசுனா, அதுக்கு நான் ஆதாரம் கேட்பேன். ஆதாரப்பூர்வமா நிரூபிக்க முடியாத எதையும் என்னோட அறிவியல் அறிவு ஒத்துக்காது" என்றேன்.
"சரிங்க தம்பி நீங்களே சொல்லுங்க, இதுக்கெல்லாம் என்ன காரணம்" என்றார். "பஸ் மலையில இருந்து கவிழ்ந்து விழுகுறது ஒரு விபத்து, அதுக்கு ஏகப்பட்ட காரணம் இருக்கலாம், probability தியரி தான். பூகம்பம் லாம் ஏன் வருதுன்னு எட்டாங்கிளாஸ் அறிவியல் புக்குலேயே இருக்கு"
"அப்போ கடவுள் இல்லைன்னு சொல்லுறீங்களா?"
"கடவுள் இருக்காரு சார், உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியாதுன்னு சொல்றேன்"
"தம்பி அந்த புக்கை முழுசா படிச்சு பாருங்க"
"புக்கை விடுங்க சார், நீங்க காட்டுறீங்களா கடவுளை?"
"தம்பி கடவுள் தான் நம்ம எல்லாரையும் படைச்சாரு, நீங்க அவரையே கேள்வி கேக்குறது தப்பு"
"கடவுள் நம்மளை படைச்சாரா? எங்க இருந்து படைச்சாரு?"
"தேவலோகத்தில இருந்து படைச்சார்"
"அப்போ அந்த தேவலோகத்தை யாரு படைச்சா?"
"அதையும் அவர் தான் படைச்சார்"
"எங்க நின்னுகிட்டு அவர் தேவலோகத்தை படைச்சாரு?"
"தம்பி இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது"
"சரி அதை விடுங்க, கடவுளை யாரு படைச்சாங்க?"
"அவரு தன்னைத் தானே படைச்சுகிட்டார்"
"காமெடி பண்ணாதீங்க"
"என்ன தம்பி, ஒரு செல் தன்னைத் தானே இரட்டிப்பாக்கி கொள்கிறதுன்னு படிச்சா நம்புறீங்க, கடவுள் தன்னைத் தானே படைச்சுகிட்டார் ன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறீங்க?"
"சார், செல் இரட்டிப்பாகுறதுக்கு முதல்ல ஒரு செல் வேணும், நான் அந்த முதல் செல் எங்க இருந்து வந்துச்சுன்னு தான் கேக்குறேன்"
"தம்பி அதுவும் கடவுள் கிட்ட இருந்து தான் வந்துச்சு"
"குழப்பாதீங்க, கடவுள் செல்லை படைச்சாரா? இல்லை ஆதாமை படைச்சாரா?" இந்தக் கேள்விக்கு அவர் பாவம் மௌனமாகிவிட்டார்.
"சரி சார், அதை விடுங்க, இந்த பாவத்துக்கு வாங்க, போன ஜென்மத்தில பாவம் பண்ணுனவங்க குழந்தையா இருக்குறப்பவே சாகுறாங்கன்னு சொல்றீங்க, எனக்கு 23 வயசாகுது இன்னும் நான் சாகலையே, போன ஜென்மத்தில அவ்வளோ நல்லவனாவா இருந்தேன்?"
"உங்க பாவத்தை அவர் தன்னோட இரத்தத்தால கழுவி விடுகிறார் தம்பி"
"அப்போ அந்த குழந்தைகள் பாவத்தையும் கழுவி விட வேண்டியது தானே?"
"அவங்க செஞ்ச பாவத்தை உணர்ந்து மன்னிப்பு கூட கேட்காதவர்கள் தம்பி"
"அவர் தான் எங்களைப் படைச்சாரு, அவரு தான் எங்களை பாவம் செய்ய வச்சாரு, அவரே சிலரை பாவ மன்னிப்பு கேட்க வச்சு, மன்னிச்சுடுறாரு, சிலரை மன்னிப்பே கேட்க வைக்காம தண்டிச்சுடுறாரு, எல்லாமே அவர் செயல் தானே. அவரு ஏன் இப்படி இருக்காரு, ஒருத்தருக்கு ஒரு நியாயம் இன்னொருத்தருக்கு ஒரு நியாயம்? நீங்க அவர்கிட்ட இதை எல்லாம் தட்டிக் கேக்க மாட்டீங்களா?
இந்தக் கேள்வியோட அவர் கிளம்பிப் போய்விட்டார். ஒரு மூணு நாலு தடவை அந்த பிளாட்பார்மில் நடந்தார், கடைசி வரைக்கும் என் முகத்தையே பார்க்கவில்லை.
"சார்" என்று அவரே பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.
ஏதோ பஸ் ரூட் தான் கேட்கப் போகிறார் என்று திரும்பினேன்
"பூனா ல மலை மேல ஒரு பஸ் கவிழ்ந்து நெறைய பள்ளிக் குழந்தைகள் இறந்துட்டாங்களே, இதுக்கு என்ன காரணம்ன்னு நெனக்குறீங்க?"
என்னடா இந்த ஆளு சமந்தம் இல்லாம ஏதோ கேக்குறாரே என்று பதில் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்
"நாட்டில, சுனாமி, பூகம்பம் எல்லாம் வந்து நெறய பேர் சாகுறாங்களே? ஏன்னு தெரியுமா?" என்று கேட்டார்.
"தெரியலைங்க, நீங்களே சொல்லுங்க" என்றேன்
"இந்த புத்தகத்தைப் படிங்க, இதுல எல்லா விளக்கமும் இருக்கு" என்று சொல்லி கையில் அழகாக கவர் டிசைன் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்ததுமே சிரிப்பு வந்துவிட்டது, சிக்கிட்டாண்டா ஒருத்தன், நண்பன் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும், இந்த ஆளை விடக் கூடாது என்று முடிவு செய்து
"நீங்களே சொல்லுங்களேன், இதுக்கெல்லாம் என்ன காரணம்?" என்று கேட்டேன்.
"இதுக்கெல்லாம் மனிதன் செஞ்ச பாவம் தான் தம்பி காரணம்"
"சுனாமி, பூகம்பத்துக்கு கூடவா?"
"ஆமா தம்பி, அவ்வளவும் பாவம்"
"அது சரிங்க, அந்த குழந்தைங்க என்ன பாவம் செஞ்சாங்க?"
"அது அவங்க போன ஜென்மத்துல செஞ்ச பாவம் தம்பி, கடவுள் எல்லா பாவத்தையும் கணக்கு வச்சுருப்பாரு"
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "சார் நான் ஒரு இஞ்சினியர், நான் கடவுளை நம்புவேன், எனக்கு ஒரு கோடி லாட்டரியில பரிசு விழும்ன்னு கூட நம்புவேன், அது என் இஷ்டம். ஆனால் என்கிட்டே வந்து நீங்க கடவுள்ன்னு பேசுனா, அதுக்கு நான் ஆதாரம் கேட்பேன். ஆதாரப்பூர்வமா நிரூபிக்க முடியாத எதையும் என்னோட அறிவியல் அறிவு ஒத்துக்காது" என்றேன்.
"சரிங்க தம்பி நீங்களே சொல்லுங்க, இதுக்கெல்லாம் என்ன காரணம்" என்றார். "பஸ் மலையில இருந்து கவிழ்ந்து விழுகுறது ஒரு விபத்து, அதுக்கு ஏகப்பட்ட காரணம் இருக்கலாம், probability தியரி தான். பூகம்பம் லாம் ஏன் வருதுன்னு எட்டாங்கிளாஸ் அறிவியல் புக்குலேயே இருக்கு"
"அப்போ கடவுள் இல்லைன்னு சொல்லுறீங்களா?"
"கடவுள் இருக்காரு சார், உங்களால் எனக்கு கடவுளை காட்ட முடியாதுன்னு சொல்றேன்"
"தம்பி அந்த புக்கை முழுசா படிச்சு பாருங்க"
"புக்கை விடுங்க சார், நீங்க காட்டுறீங்களா கடவுளை?"
"தம்பி கடவுள் தான் நம்ம எல்லாரையும் படைச்சாரு, நீங்க அவரையே கேள்வி கேக்குறது தப்பு"
"கடவுள் நம்மளை படைச்சாரா? எங்க இருந்து படைச்சாரு?"
"தேவலோகத்தில இருந்து படைச்சார்"
"அப்போ அந்த தேவலோகத்தை யாரு படைச்சா?"
"அதையும் அவர் தான் படைச்சார்"
"எங்க நின்னுகிட்டு அவர் தேவலோகத்தை படைச்சாரு?"
"தம்பி இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது"
"சரி அதை விடுங்க, கடவுளை யாரு படைச்சாங்க?"
"அவரு தன்னைத் தானே படைச்சுகிட்டார்"
"காமெடி பண்ணாதீங்க"
"என்ன தம்பி, ஒரு செல் தன்னைத் தானே இரட்டிப்பாக்கி கொள்கிறதுன்னு படிச்சா நம்புறீங்க, கடவுள் தன்னைத் தானே படைச்சுகிட்டார் ன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறீங்க?"
"சார், செல் இரட்டிப்பாகுறதுக்கு முதல்ல ஒரு செல் வேணும், நான் அந்த முதல் செல் எங்க இருந்து வந்துச்சுன்னு தான் கேக்குறேன்"
"தம்பி அதுவும் கடவுள் கிட்ட இருந்து தான் வந்துச்சு"
"குழப்பாதீங்க, கடவுள் செல்லை படைச்சாரா? இல்லை ஆதாமை படைச்சாரா?" இந்தக் கேள்விக்கு அவர் பாவம் மௌனமாகிவிட்டார்.
"சரி சார், அதை விடுங்க, இந்த பாவத்துக்கு வாங்க, போன ஜென்மத்தில பாவம் பண்ணுனவங்க குழந்தையா இருக்குறப்பவே சாகுறாங்கன்னு சொல்றீங்க, எனக்கு 23 வயசாகுது இன்னும் நான் சாகலையே, போன ஜென்மத்தில அவ்வளோ நல்லவனாவா இருந்தேன்?"
"உங்க பாவத்தை அவர் தன்னோட இரத்தத்தால கழுவி விடுகிறார் தம்பி"
"அப்போ அந்த குழந்தைகள் பாவத்தையும் கழுவி விட வேண்டியது தானே?"
"அவங்க செஞ்ச பாவத்தை உணர்ந்து மன்னிப்பு கூட கேட்காதவர்கள் தம்பி"
"அவர் தான் எங்களைப் படைச்சாரு, அவரு தான் எங்களை பாவம் செய்ய வச்சாரு, அவரே சிலரை பாவ மன்னிப்பு கேட்க வச்சு, மன்னிச்சுடுறாரு, சிலரை மன்னிப்பே கேட்க வைக்காம தண்டிச்சுடுறாரு, எல்லாமே அவர் செயல் தானே. அவரு ஏன் இப்படி இருக்காரு, ஒருத்தருக்கு ஒரு நியாயம் இன்னொருத்தருக்கு ஒரு நியாயம்? நீங்க அவர்கிட்ட இதை எல்லாம் தட்டிக் கேக்க மாட்டீங்களா?
இந்தக் கேள்வியோட அவர் கிளம்பிப் போய்விட்டார். ஒரு மூணு நாலு தடவை அந்த பிளாட்பார்மில் நடந்தார், கடைசி வரைக்கும் என் முகத்தையே பார்க்கவில்லை.
No comments:
Post a Comment